உலகம்

உலகின் பணக்கார பெண் மரணம்

webteam

உலகின் பணக்கார பெண்மணி என்று கூறப்படும் லில்லியன் பெட்டென்கார்ட் மரணமடைந்துள்ளாக அவர் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

பாரீஸ் நகரில் வசித்து வந்தவர் லில்லியன் பெட்டென்கார்ட் (94). அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருந்த இவர். உலகின் பணக்கார பெண்மணி. போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருந்தவர் இவர். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 39.5 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களுக்கு பெட்டென்கார்ட் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.