உலகம்

வணிகக் கப்பலுடன் அமெரிக்கப் போர்க்கப்பல் மோதல்: 10 வீரர்களைக் காணவில்லை

webteam

சிங்கப்பூர் அருகே வணிகக்கப்பல் மீது அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல் ஒன்று மோதியது. இதில் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த 10 பேரைக் காணவில்லை எனவும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யுஎஸ்எஸ் ஜான் மெக்கெய்ன் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல், ஏவுகணைகள் மூலமாக எதிரிகளின் கப்பல்களைக் தாக்கும் வகையச் சேர்ந்தது. சிங்கப்பூர் துறைமுகத்துக்குச் செல்வதற்காக சிங்கப்பூர் நீரிணை அருகே கப்பல் வந்தபோது இந்த விபத்து நேரிட்டது. இதில் அமெரிக்கக் கப்பலின் இடதுபுறம் பலத்த சேதமடைந்தது.காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.