வியட்நாம் யாஹி புயல் முகநூல்
உலகம்

வியட்நாம் | புயல் மழையால் பரிதாபமாக பறிபோன உயிர்கள்... 180-ஐ தொடும் உயிரிழப்பு எண்ணிக்கை!

வியட்நாமில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 179 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

கடந்த வாரம் வியட்நாமை தாக்கிய யாஹி என்ற புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனிடையே மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர். 145 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வியட்நாமை தொடர்ந்து யாஹி புயல், தாய்லாந்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.