மீட்புப் பணி pt desk
உலகம்

நேபாளம்: இந்தியர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 41 பேர் உயிரிழப்பு

webteam

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 104 பேர் நேபாளத்தின் காத்மாண்டுவிற்கு, 3 பேருந்துகளில் யாத்திரை சென்றுள்ளனர். அப்போது 40-க்கும் மேற்பட்டோர் பயணித்த பேருந்து, நேபாளத்தின் தனாஹூன் மாவட்டத்திலுள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 43 பேரில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக, தனாஹூன் மாவட்ட அதிகாரி தெரிவித்திருந்தார்.

Death

இந்த நிலையில் இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக, மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் சரியான எண்ணிக்கை தங்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.