உலகம்

இலங்கை மசூதிக்குள் தொழுகை நடத்தும் பயங்கரவாதியின் காட்சிகள் வெளியீடு

rajakannan

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

முகமது நாசர் அல்லது முகமது அசார் எனக் கருதப்படும் அந்த நபர்தான் மட்டக்களப்பு பகுதியில் உள்ள தேவாலயத்தில் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியவர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் அவர் மட்டக்களப்பு பகுதிக்கு வருகை தருவது, பின்னர் ஒரு மணி நேரம் பயணித்து மட்டக்களப்பு மசூதிக்கு வருகை தருவது சிசிடிவி காட்சியில் இடம்பிடித்துள்ளது. 

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் அவர் செல்போனில் வரும் தகவல்களை பார்க்கிறார்.அப்போது அவ்வழியே காவல்துறை வாகனம் ஒன்று வருகிறது. எனினும் அவர்கள் இவரை கவனிக்கவில்லை. 5.42 மணிக்கு மசூதி வாசல் திறக்கப்படுகிறது. பைகளுடன் உள்ளே செல்லும் அவர் தொழுகையில் ஈடுபடுகிறார். 

தொழுகையை வேகமாக முடித்துவிட்டு கிளம்பும் அவர் தனியே ஒரு இடத்தில் தொழுகையில் ஈடுபடுகிறார்.காலை 9.30 மணி அளவில் ஆரஞ்சு நிற சட்டை அணிந்து மசூதியில் இருந்து வெளியேறி செல்போனில் தகவல்களை பரிமாறுகிறார். பின்னர் அவர் தேவாலயம் சென்று ‌தாக்குதல் நடத்தியுள்ளார். கட்டன்குடியை பூர்வீகமாக கொண்ட இவர், தாக்குதல் குழுவுக்கு தலைமை வகித்த ஜஹ்ரானுக்கு நெருங்கிய நண்பர் எனத் தெரிய வந்துள்ளது.