உலகம்

சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு

webteam

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் சாத்தான் மீது கல்லெறியும் முக்கிய சடங்கை நிறைவேற்றினர்.

பக்ரீத் பண்டிகையை ஒட்டித் தொடங்கிய ஹஜ் யாத்திரையில் உலகம் முழுவதம் இருந்து சுமார் 20 லட்சம் பயணிகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் அராபத் மலையில் அமர்ந்து குரான் படிக்கும் சடங்கை முடித்த ஹஜ் பயணிகள்,

இரண்டாவது நாளில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கை நிறைவேற்றினர். ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கான பயணிகள் சவுதியில் குவிந்திருப்பதால், மெக்கா மற்றும் மதீனாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.