உலகம்

புதிய அணு ஆயுதங்கள்: பாக். பிரதமர் பகீர் தகவல்

புதிய அணு ஆயுதங்கள்: பாக். பிரதமர் பகீர் தகவல்

webteam

இந்தியத் தாக்குதலை எதிர்கொள்ள குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தெரிவித்துள்ளார். 
நியூயார்க்கில் அவர் பேசும்போது, இந்திய ராணுவத்தினர் மறைமுக போர் உத்தியைக் கையாள்வதாகவும் அதை எதிர்கொள்ளும் வகையில் குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை கடந்த 50 ஆண்டுகளாகவே பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் இது குறித்து எந்த நாடும் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.