உலகம்

பிற நாடுகளின் கதியே வடகொரியாவுக்கு: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

webteam

பிற நாடுகளின் கதியே வடகொரியாவுக்கு ஏற்படும் என்று அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை விடுத்த எச்சரிக்கைகள் வடகொரியாவுக்கு போதாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கடும் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று ஏற்கெனவே கூறியதைவிடவும் கடுமையான சொற்களால் வடகொரியாவை எச்சரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி குவாம் தீவைத் தாக்கப் போவதாக வடகொரியா அறிவித்திருக்கும் நிலையில், ட்ரம்ப் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். வட கொரியா மீது முன்னெச்சரிக்கைத் தாக்குதல் நடத்தும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. எனினும் பல நாடுகளுக்கு ஏற்பட்ட கதிதான் வடகொரியாவுக்கும் ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார்.