இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையேயான போரில் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஸா நகரில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 2,200 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் முப்படை தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.