உலகம்

18 ஆண்டுகளில் 30 பேரைக் கொன்று தின்ற கணவன் மனைவி கைது

webteam

ரஷ்யாவில் 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று தின்று வந்த கணவன் மனைவியை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு ரஷ்யாவை சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ் மற்றும் அவரது மனைவி நடாலியா. இவர்கள் இருவரும் சுமார் 18 ஆண்டுகளாக நரமாமிசம் சாப்பிட்டு வந்துள்ளனர். இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசுவதை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் மனித சதை, தோல் உட்பட பல உறுப்புகளை இவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

கொன்றவர்களின் உடல் உறுப்புகளுடன் இருவரும் செல்ஃபி எடுத்து உள்ளனர். இதைக் கண்ட போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, ரஷ்ய போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.