உலகம்

ரசாயன ஆலையில் வெடி விபத்து: 47 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்

webteam

சீனாவில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள யான்செங் (Yancheng) நகரில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு வியாழக்கிழமை மாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. 90-க்கும் அதிகமானோர் படுகாய மடைந்துள்ளனர்.


அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த விபத்தில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கு இரையாகின. இந்த ஆலையில் பாதுகாப்பு குறைகள் இருந்ததாகவும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.