உலகம்

கரைபுரண்டு ஓடும் வெள்‌ளத்தில் மூழ்கிய கார்

webteam

பெருவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று மூழ்கும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் தொடரும் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெருவிலுள்ள பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 

மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. செனாம்ஹி மலைப் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரில் சிக்கி சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று மூழ்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரிலிருந்தவர்கள் அருகிலிருந்த மக்களின் உதவியால் கார் கண்ணாடி வழியாக தப்பித்தனர்.