உலகம்

துருக்கி: வெள்ள பாதிப்பு பலி 40 ஆக உயர்வு

Sinekadhara

துருக்கி நாட்டில் போஸ்குர்ட் நகரில் வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

இந்நகரத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மட்டும் 3 நாட்களில் 45 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு வெள்ளத்தில் கட்டடங்கள் இடிந்து கிடக்கும் காட்சிகளும் மீட்புப் பணிகள் நடைபெறும் காட்சிகளும் ட்ரோன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளன. துருக்கியில் ஒரு பகுதியில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.