உலகம்

ஆஸ்திரேலியாவில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு குரல்

webteam

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மெல்பர்னில் நாடாளுமன்ற கட்டடம் முன்பாக திரண்ட தமிழர்கள், அரை மணி நேரம் மவுனப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தைத் திருநாளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ‌