அமேசான் புதிய தலைமுறை
உலகம்

”எந்த வேலையும் இல்லை.. ஆனா, சம்பளம் ரூ.3 கோடி” - விமர்சனத்திற்கு உள்ளான அமேசான் ஊழியரின் பதிவு!

Prakash J

ஊழியர்கள் பலரும் தங்கள் பணி சம்பந்தமான கருத்துகளை ‘பிளைண்ட்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மூத்த ஊழியர் ஒருவர் வெளியிட்டபதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பை மேற்கொண்டபோது என்னுடைய வேலை பறிபோனது. இதையடுத்து அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தேன். கடந்த 1.5 ஆண்டுகளாக, முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஊதியம் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி. இந்த ஊதியத்துக்கான எந்த வேலையும் நான் அங்கு செய்வதில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைவான வேலைகளையே நான்செய்துள்ளேன். வெறும் 3 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை செய்ய 3 மாதங்கள் எடுத்துள்ளேன். என்னுடைய வேலை நேரத்தில் பெரும் பகுதி அலுவலக மீட்டிங்களுக்கே கழிந்துவிடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக ஊதியம் பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ”இந்த செயல்பாடு, நன்றாக வேலை பார்ப்பவர்களையும் பாதிக்கக்கூடியது” என அவருக்கு ஆதரவாகவும், ”சிலருக்கு அதிக வேலையும் சிலருக்கு குறைவான வேலையும் வழங்கப்படுவது கார்ப்பரேட் கட்டமைப்பில் உள்ள பிரச்னை” என அவருக்கு எதிராகவும் விமர்சனக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: சிறையில் புகைபிடிக்கும் நடிகர் தர்ஷன் போட்டோ! சிறப்பு சலுகையா? விசாரணையில் 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!