உலகம்

பிரேசிலில் கப்பல் கவிழ்ந்து 18 பேர் பலி

webteam

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் கிழக்கு பகுதி மாகாணமான பஹியா கடற்கரை பகுதியில், கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 

சால்வடார் பகுதியிலிருந்து 116 பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய கப்பல் திடீரென விபத்தில் சிக்கியது. கனமழை மற்றும் காற்று காரணமாக, கடல் அலை கொந்தளித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கப்பல் கவிழ்ந்ததும்‌ அருகிலிருந்த மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். அவர்களோடு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இதே ‌பகுதியில்‌ கடந்த ‌நாட்களுக்கு முன் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காணமல் போயினர்‌.