வீடியோ ஸ்டோரி

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக செந்தில் பாலாஜி மீது காவல் நிலையத்தில் வழக்கு

kaleelrahman

மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆற்றில் இறங்கி மாட்டுவண்டி உரிமையாளர்கள் மணல் அள்ளலாம். அதனை தடுக்கும் அதிகாரிகள் பதவியில் இருக்க முடியாது என்று பேசினார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.