வீடியோ ஸ்டோரி

திருப்பத்தூர்: தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்

Sinekadhara

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் ஆம்பூரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மத்தியில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற நபர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். அடித்துச்செல்லப்பட்ட நபரின் பெயர் குபேந்திரன் எனத் தெரியவந்துள்ளது. அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.