நிலவில் இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு மும்பாக சந்திரயான்3 சந்தித்த இடர் குறித்து முதுநிலை அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) அவரிடம் கேட்ட பொழுது,
”வரலாற்று சாதனை படைத்த சந்திரயான்3 நிலவில் இறங்கியதை மிக மிக மகிழ்சியாக உணர்கிறேன். ஆனாலும் கடைசி சில நிமிடங்களுக்கு முன்னதாக 180 மீட்டர் உயரத்தில் விண்கலத்தில், இடர், உணர், ஆபத்து தவிர் என்ற செயற்கை நுண்ணறிவின் மூலம் தரையிறங்கும் நிலையில் இருந்த சந்திரயான்3 ஒரு இடரை சந்தித்தது. அந்த நிமிடம் விஞ்ஞானிகளின் உணர்வை விவரிக்கமுடியாது. ” என்கிறார். அந்த இடர்பாடு என்ன? அதை எப்படி விண்கலம் கையாண்டது என்பது குறித்து காணொளியை பார்த்துத்தெரிந்துக்கொள்ளலாம்.