ஆளுநரை மரபுபடி வரவேற்றதாகவும் அதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆளுநரை வரவேற்பது மரபு, அதன்படி மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராகிய நானும் ஆளுநரை வரவேற்றோம். முதல்வர் பழனிசாமி எங்களுக்கு வழங்கிய வழிமுறைப்படியே வரவேற்றோம். இது காலம் காலமாக நடந்துவரும் நடைமுறைதான். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினார்.