டிரெண்டிங்

‘ராஜிவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டோம்’ - ராகுல் உருக்கம்

rajakannan

ராஜிவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு ஐஐஎம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராஜிவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா? என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, மனிதவெடிகுண்டு தாக்குதல் மூலம் ராஜிவ் கொல்லப்பட்டதை நினைத்து தானும், தனது சகோதரி பிரியங்காவும் மிகுந்த துயரத்தில் இருந்ததாகவும், பல ஆண்டுகள் வரை ராஜிவ் கொலையாளிகள் மீது ஆவேசத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போது ராஜிவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டதாக கூறினார். 

தன்னுடன் பேட்மிண்டன் விளையாடியவர்களே, பாட்டி இந்திரா காந்தியை கொன்றனர் என்பதை நினைவு கூர்ந்த ராகுல், ராஜிவ் கொலையானதற்கு பின், பாதுகாப்பு சூழல் மாறியதால் இரவு, பகல் பாராமல் 15 பேருடனேயே நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ராகுல் வேதனை தெரிவித்தார்.