டிரெண்டிங்

டிடிவி தினகரன் மக்களால் ஓரங்கட்டப்படுவார்: எம்எல்ஏ சாடல்

Rasus

கட்சியால் ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன் விரைவில் தமிழக மக்களால் ஓரங்கட்டப்படுவார் என கோவை கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதற்கு எதிராக தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக பேசி வரும் பட்சத்தில் மக்களால் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்" என்றார்.