டிரெண்டிங்

தமிழக தேர்தல் : பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.217 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்

Veeramani

தமிழகத்தில், தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை 217 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், கடந்த 19ஆம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்டவற்றின் விவரங்களைத் தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 80 கோடியே 88 லட்சம் ரூபாய் பணமும், 136 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பிடிபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.