டிரெண்டிங்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு

Rasus

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அவலுகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10-ஆம் வகுப்பு மாணவி உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.