டிரெண்டிங்

ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?: ராஜஸ்தான் டாஸ் வென்று பவுலிங்க் தேர்வு

webteam

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் இந்த சீசனில் தலா 13 ஆட்டங்களில் விளையாடி தலா 6 வெற்றிகளைப் பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் தோற்கும் அணி ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும். மொத்தத்தில் இரு அணிகளுக்கும் இது வாழ்வா, சாவா ஆட்டமாகும்.

இதுவரை இவ்விரு அணிகளும் 21 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் ‘டை’யில் முடிந்துள்ளன.