டிரெண்டிங்

நீட் தேர்வை கண்டித்து மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

webteam

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்த்து சென்னை பாரிமுனையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ண‌ன் தலைமையில் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மருத்துவக் கல்வியில் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாண‌வர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், அரசு இயற்றிய நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்‌புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், கைது செய்து அழைத்துச் சென்றனர்.