டிரெண்டிங்

பொள்ளாச்சி: நள்ளிரவில் வீடு புகுந்து 6 பவுன் நகை, கணினி கொள்ளை

kaleelrahman

பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை. ஆறு சவரன் நகை மற்றும் கணினி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

பொள்ளாச்சி அருகே உள்ள ஊத்துக்காடு ரோடு முல்லை நகரைச் சேர்ந்த குணாலன் (லேட்) என்பவரது மனைவி கிரிஜா. இவரது மகன் தீபன் சக்கரவர்த்தி நேற்று குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது மேல் மாடியில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 6 சவரன் நகை, லேப்டாப் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடத்தில் துணிகரமாக கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.