டிரெண்டிங்

பெட்ரோல் பங்க்குகள் இனி இரவு 10 வரை இயங்கும் - தமிழக அரசு

webteam

பெட்ரோல் பங்க்குகள் இனி இரவு பத்து மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக  தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது.

அண்மையில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளுக்கு அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் முன்னதாக காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்க்குகள், இனி இரவு 10 மணி இயங்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது.