டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: "அரிசி, மளிகை வேண்டும்" - உதவிக்கரம் கோரும் குரல்

நிவேதா ஜெகராஜா

“எனக்கு வேலை இல்லை. என் இரண்டு குழந்தைகளுக்கும் வலிப்பு நோய் உள்ளது. வீட்டு வாடகை தர முடியவில்லை. எங்களுக்கு நிதி உதவி தேவை” – ஹாசன், காஞ்சிபுரம்

“நான் பாஸ்டர். எங்கள் பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கு மளிகை மற்றும் அரிசி உதவி தேவை– டேவிட், சென்னை

“நான் ஆட்டோ ஓட்டுனர். இரண்டு குழந்தைகள் உள்ளது. அரிசி மளிகை வேண்டும்” – மணிகண்டன், திருவள்ளூர்

“2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எங்களுக்கு உணவு, அரிசி, மளிகை பொருள்கள் தேவை” – ரசித், வண்னாரப்பேட்டை

“எனக்கு வேலையில்லை. வீட்டில் 4 பேருக்கு மளிகை, அரிசி தேவை” – நிஷா, சென்னை

“நான், டிரைவர். குடும்பத்தில் 3 பேர் உள்ளனர். மளிகைப்பொருள்களும், அரிசியும் தேவை– குமாரி, சென்னை

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'