டிரெண்டிங்

கொடிமரத்தில் அவசர அவசரமாக பொறிக்கப்பட்ட ஓபிஎஸ் பெயர்

webteam

அதிமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், கொடிமர பெயர்பலகையில் அவரது பெயர் அவசர அவசரமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே போஸ்‌ மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் அதிமுக முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 

அந்த கொடிமரத்திற்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லை. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சர்ச்சையை எழுப்பிய நிலையில், அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் பெயரும் அந்த பெயர் பலகையில் பொறிக்கப்பட்டு, புதிய கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.