டிரெண்டிங்

"தாயில்லா பிள்ளைகள் நாங்கள்; கைவிட்டு விடாதீர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்

"தாயில்லா பிள்ளைகள் நாங்கள்; கைவிட்டு விடாதீர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்

kaleelrahman

தாயில்லா பிள்ளைகளை கைவிட்டுவிடாதீர்கள் என்றும் ஜெயலலிதா இல்லாமல் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமில்லை  என்றும் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பரப்புரையில் உருக்கமாக பேசினார்.

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், தொகுதிக்கு உட்பட்ட குதிரைச்சாரிகுளம், பள்ளக்காபட்டி, கீழ உரப்பனூர், சித்தாலை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அமைச்சர் ஆர்பி.உதயகுமாருடன் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் அவரது மகள் ப்ரியதர்ஷினி தனது தந்தைக்காக வாக்கு சேகரித்து வருகிறார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மக்கள் மத்தியில் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

“ஜெயலலிதா இல்லாமல் நாங்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம், மக்களுக்காக உழைக்க வாய்ப்பை கூட கேட்க விடாமல் எங்களை பாடாய் படுத்துகின்றனர். தூங்கியவர்கள் மறைந்திருந்தவர்கள், ஒழிந்து இருந்தவர்கள் என எல்லா தீய சக்திகளும் தேர்தலை வைத்து நடமாடி வருகிறார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் அவர்களை பராசக்தியாக அழித்து ஒளித்திருப்பார். தாயில்லா பிள்ளைகளாகிய எங்களை கைவிட்டுவிடாமல் தாயாக இருந்து எங்களை காக்க வேண்டும்.

முதல்வர் தாயின் கற்பை பற்றி பேசி அவரை கண்கலங்க வைத்துள்ளனர். வாக்குகளை பெறுவதற்காக தமிழர் பண்பாட்டை இழந்து மரபுகளை மீறி திமுகவினர் விமர்சனம் செய்கிறார்கள். 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டங்களை முதல்வர் 4 ஆண்டுகளில் செய்துள்ளார்” என்று உருக்கமாக பேசினார்.