டிரெண்டிங்

விவசாயிகளின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

kaleelrahman

விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் காலில் விழுந்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரித்தார்.

திருமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி, கெஞ்சம்பட்டி, ஆதனூர், போலம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கிராமப்புறங்களில் வாக்கு சேகரிக்க வாகனத்தில் சென்றபோது வாகனத்திலிருந்து கீழே இறங்கிய ஆர்.பி.உதயகுமார் அந்த பகுதியில் துவரம்பருப்பு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.