டிரெண்டிங்

பெரி‌யபாண்டிய‌ன் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜலெட்சுமி ஆறுதல்

பெரி‌யபாண்டிய‌ன் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜலெட்சுமி ஆறுதல்

webteam

ராஜஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ‌காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தினரை அமைச்சர் ராஜலெட்சுமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளியில் உள்ள பெரியபாண்டியனின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் ராஜலெட்சுமி, பெரியபாண்டியனின் படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மக்களவை உறு‌ப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அப்போது பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, உயிரிழந்த கணவரின் இறப்புச் சான்றிதழ், மகனின் கல்வி, துறை ரீதியான சலுகைகள் உள்ளிட்டவைகளைப் பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக முதலமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ‌உறுதியளித்ததாக‌, பெரியபாண்டியனின் மனைவி கூறினார்.