டிரெண்டிங்

மோடியின் கழுத்தை அறுக்க பீகாரில் நிறையபேர் தயாராக உள்ளனர்: ராப்ரி தேவி

rajakannan

பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும், கைகளை வெட்டவும் பீகாரில் நிறையே பேர் தயாராக உள்ளனர் என்று லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினாலோ, விரல்களை நீட்டினாலோ அதை வெட்டுவோம் என பீகார் மாநில பாஜக தலைவரும், எம்பியுமான நித்யானந்த் ராய் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தன்னுடைய கருத்துக்கு நித்யானந்த் ராய் மனிப்பு கோரினார்.

இந்நிலையில், பாஜக தலைவரின் கருத்துக்கு லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி கடுமையான எதிர் விமர்சனம் செய்துள்ளார். ராஷ்டிர ஜனதா தளம் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய ராப்ரி தேவி, “பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினாலோ, விரல்களை நீட்டினாலோ அதை வெட்டுவோம் என சில பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் பீகார் மக்களின் விரல்கள், கைகளை வெட்டிப் பார்க்கட்டும். அப்போதும் பீகார் மக்கள் அமைதியாக இருப்பார்களா? அதேநிலைதான் மோடிக்கும் ஏற்படும். நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும், கைகளை வெட்டுவதற்கும் பீகாரில் நிறைய பேர் உள்ளனர்” என்று பேசினார்.