டிரெண்டிங்

மதுரை உயர்நீதிமன்றமே ஏரியின் மீது தான் கட்டப்பட்டுள்ளது : ஹெச்.ராஜா

webteam

நடிகர் கமல்ஹாசனை விமர்சிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். 

சமீப காலமாக நடிகர் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறி வருகிறார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்து தீவிரவாதம் என்று கமல் கூறியதால் அவர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்த கமல், காணாமல் போன ஏரியை கண்டறியுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் ”ஒரு ஏரியைக் காணவில்லையாம் தன் ரசிகர்களை தேடச் சொல்லப்போகிறேன் என்கிறார் கமல். மதுரை உயர்நீதிமன்றமே ஏரியின் மீது தான் உள்ளது. பாவம் மக்கள்.” என்று பதிவிட்டுள்ளார். ஹெச்.ராஜாவின் இத்தகைய பதிவிற்கு கமல் ரசிகர்கள் பலர் மீம்ஸ்கள் போட்டு பதில் அளித்து வருகின்றனர்.