டிரெண்டிங்

கடந்த ஆண்டு இதே நாள்: ஜெயலலிதா பங்கேற்ற கடைசி பொதுநிகழ்ச்சி

கடந்த ஆண்டு இதே நாள்: ஜெயலலிதா பங்கேற்ற கடைசி பொதுநிகழ்ச்சி

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடைசியாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று, ஓராண்டு நிறைடைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதேநாளில் தான், சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதன் பிறகு ஜெயலலிதாவின் நகர்வை பொதுமக்களால் பார்க்க முடியாமல் போனது.

ரயில் சேவையைத் தொடங்கி வைத்த, மறுநாளே உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். பிறகு 74 நாட்கள் கடந்தும், சிகிச்சைப் பலன் அளிக்காமல் மருத்துவமனையிலேயே ஜெயலலிதா உயிழந்தார். கடைசியாக பொதுநிகழ்ச்சியில் பேசியபோதும், சென்னையை அதிநவீன வசதிகள் கொண்ட பெருநகரமாக மாற்ற வேண்டும் என்ற தனது கனவு நனவாகி வருவதாக கூறியிருந்தார் ஜெயலலிதா.

மேலும் பேசிய ஜெயலலிதா, “சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல் சேவையின் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது கட்ட பணிகளுக்கும் ஜப்பான் நிறுவனம் ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன். மெட்ரோ ரயில் சேவையைப் போன்று, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் சுற்று வட்டப்பாதை திட்டம், முதலீட்டு வளர்ச்சி ஆகிய திட்டங்களுக்கும் உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.