டிரெண்டிங்

கன்னியாக்குமரி எம்.பி இடைத்தேர்தல்: பிரியங்கா போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பமனு

webteam

கன்னியாகுமரி எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியாக்குமரி எம்.பியாக இருந்தவர் வசந்த் குமார். அவர் மறைவுக்கு பிறகு அந்த நாடாளுமன்றத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மறைந்த வசந்த்குமாரின் மகன் விஜய் வசந்த் கன்னியாக்குமரி எம்.பி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அதே இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி போட்டியிட சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.