டிரெண்டிங்

எம்.பி.பதவியை ராஜி‌னாமா செய்வேன் : மைத்ரேயன் அதிரடி

webteam

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா என திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுத்தால், அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என அழுத்தம் கொடுக்குமாறு, நேற்றுமுன் தினம் நடந்த ஆலோசனையின்போது முதலமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக எம்.பி மைத்ரேயன், அதிமுக தலைமை ஆணையிட்டால் தான் மட்டும் அல்லது அனைத்து எம்.பி க்களும் ராஜினாமா செய்யத் தயார் எனக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்தின் நலனிற்காக திமுக என்ன அழுத்தம் கொடுத்தது என வினவியுள்ளார்.