டிரெண்டிங்

விமான விபத்து என வதந்தி : புதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு

webteam

புதுக்கோட்டையில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக வதந்தி பரப்பிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகேயுள்ள வசந்தனூர் கண்மாயில் கடந்த 12-ஆம் தேதி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதுதொடர்பாக சில தொலைக்காட்சிகளில் செய்தியும் ஒளிபரப்பாகியது. இதையடுத்து விளக்கமளித்த மாவட்ட நிர்வாகம், அவ்வாறு எந்த விமான விபத்தும் புதுக்கோட்டையில் நிகழவில்லை என்றும், அது வதந்தி என்றும் கூறியது.

இந்நிலையில் வதந்தி பரப்பியதாக களாபம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருப்புனவாசல் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் வதந்தி பரப்பி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய நபர்களிடமும் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.