டிரெண்டிங்

அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனை

Sinekadhara

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைகளும், வருமான வரித்துறையினரின் சோதனைகளும் தீவிரமடைந்து வருகிறன்றன. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகம் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனையில் ஈடுபட்டிருக்கிறது.

அதேபோல் அரியலூர் சின்னக்கடை தெருவில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.