டிரெண்டிங்

ஜெயலலிதா ஆசியால் இரட்டை இலை கிடைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

ஜெயலலிதா ஆசியால் இரட்டை இலை கிடைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

webteam

ஜெயலலிதா ஆசியால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஆதாரங்களை ஒப்படைத்ததாலேயே எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. சின்னம் எங்கள் வசம் உள்ளது. இரட்டை இலை சின்னம் வழக்கில் விசாரணையை மேற்கொண்ட  தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது” என்றார்.

இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் பழனிசாமி - ஓபிஎஸ் அணிக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வர் பேசியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.