டிரெண்டிங்

துரைமுருகன் பேச்சால் பேரவையில் சிரிப்பலை

webteam

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனின் பேச்சால் பேரவையில்  சிரிப்பலை வீசியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்தும் நையாண்டியாக பேசினார். 

பட்ஜெட் குறித்து பேசிய துரைமுருகன், ஆட்சி மாறுகிறது ஆனால் நிதித்துறை செயலர் சண்முகம் மாறவில்லை என்று பேசினார். இவரது பேச்சை கேட்ட அதிகாரிகள், எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.

துரைமுருகன்: ரவுடிகள் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடும் அளவுக்கு தமிழகம் அமைதியாக இருக்கிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி: ரவுடிகளை கைது செய்தது அதிமுக அரசு தான் ஆனால் திமுக இதுபோன்று கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதில்லை. 

துரைமுருகன்: நாங்கள் கைது செய்யவில்லை என்றாலும், ரவுடிகள் கேக் வெட்டி கொண்டாடியது அதிமுக ஆட்சியில் தான்.பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் போது ஈபிஎஸ் இவ்வாறு பேச மாட்டார் ஆனா இப்ப நன்றாக பேசுகிறார் 

துரைமுருகன்: 2011 ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்தார். கொஞ்ச நாள் தர்மயுத்தம் செய்த காரணத்தால் கடந்தாண்டு தாக்கல் செய்யவில்லை. தற்போது மீண்டும் பட்ஜெட் போட்டுள்ளார்.