டிரெண்டிங்

மோடி வருகையை எதிர்த்து கருணாநிதி கருப்புச் சட்டை

webteam

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் ராணுவ கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி  இல்லத்தில் கருப்புக் கொடி  ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்த்தில் இதற்கான புகைபடத்தை அவர் பதிவிட்டுள்ளார்.