டிரெண்டிங்

டிஐஜி ரூபா ரகசியங்களை வெளியிடுகிறார்: புகழேந்தி குற்றச்சாட்டு

webteam

டிஐஜி ரூபா சட்டத்திற்குப் புறம்பாக அலுவல் ரகசியங்களை வெளியே பரப்புவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கர்நாடக அரசிடம் கடிதம் அளித்திருக்கிறோம் என அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சட்டத்திற்கு புறம்பாக அலுவல் ரகசியங்களை டிஐஜி ரூபா பரப்பி வருகிறார். தினந்தோறும் ஊடகங்களையும், பத்திரிக்கைகளையும் தொடர்பு கொண்டு சசிகலா மீது அவதூறு பரப்பி வருகிறார். பொறுப்பில் இருக்கும் அதிகாரி அலுவல் ரகசியங்களை வெளியே பரப்புவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசிடம் கடிதம் அளித்திருக்கிறோம். பொறுப்பில் இருப்பவர்கள் அலுவல் ரகசியங்களை வெளியே கூறுவது சட்டப்படி தவறு. சசிகலாவின் பெயருக்கு ரூபா களங்கம் ஏற்படுத்துவதை ரூபா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.