டிரெண்டிங்

ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதே எனது விருப்பம்: விஜயகாந்த்

rajakannan

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதே தனது விருப்பம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மா‌வட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு சிகிச்சை பெறுவர்களிடம் நலம் விசாரித்தார். மருத்துவமனைக்கு வெளியே நிலவேம்பு கசாயம் கொடுக்கும்‌ பணியினை அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்புக்கான‌ துப்புரவுப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.‌ மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி நீடிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீடிக்கக்கூடாது என்பதே தமது விருப்பம் என்று பதில் அளித்தார்.