டிரெண்டிங்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி‌கள்: முதலமைச்சர் துவக்கி வைத்தார்

Rasus

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி கோரி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, 5 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், பார்வையற்ற ஐந்தாயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு கோடியே 58 லட்ச ரூபாய் செலவில் ஒளிரும் மடக்கு குச்சிகள் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதற்கு அடையாளமாக, 5 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகளை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் தனித்துவமான அடையான அட்டை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.