டிரெண்டிங்

அண்ணா பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை

webteam

பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.