சங்கர் கணேஷ் pt desk
தமிழ்நாடு

விழுப்புரம்: காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை – வீடியோ வெளியிட்டு இளைஞர் விபரீதம்

webteam

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகேயுள்ள மோட்சகுளம் கிராமத்தில் சங்கர் கணேஷ் என்ற இளைஞர் கோமலா என்ற பெண்னை காதலித்து கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். காதல் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாலும் குடும்ப கஷ்டத்தினாலும் கோமலா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிலியே இருந்த சங்கர் கணேஷ், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

House

இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில், குடும்ப கஷ்டத்தினாலும், காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதாலும் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். எல்லோருக்கும் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கும். வாழ்க்கையே கஷ்டமாக இருப்பதால் இந்த முடிவை எடுப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.

காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.