School teacher pt desk
தமிழ்நாடு

தி.மலை| மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ

webteam

செய்தியாளர்: எஸ்.ரவி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனக்கரசு (42) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பில் மாணவி ஒருவர், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில், அவருக்கு டிசி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Govt School

இதையடுத்து தனக்கரசு குடிபோதையில் அந்த மாணவியை போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய். உடனே வீட்டுக்கு வா என்று பேசியுள்ளார். அந்த மாணவியும் சார் நான் டிசி வாங்கப் போறேன் நான் ஏன் வீட்டிற்கு வர வேண்டும் என கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு வந்த செல்போன் உரையாடலை வைத்து, சில இளைஞர்கள் ஆசிரியர் தனக்கரசை தனியாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

இதை வீடியோ எடுத்து அந்த இளைஞர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்ட போது, தனக்கரசு 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர். இந்த தகவல் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.