தமிழ்நாடு

மதுபோதையில் சாலையில் செல்வோரை கத்தியால் வெட்டிய வாலிபர் 

webteam

ஊத்துக்கோட்டை அருகே மதுபோதையில் வாலிபர் ஒருவர் 5 பேரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த வண்டிமேட்டுகொள்ளை கிராமத்தில் ஹரி என்ற இளைஞர் மதுபோதையில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவ்வழியே சென்ற 5 பேரை சரமாரியாக வெட்டினார். இதைப்பார்த்திருந்த அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் போதையில் 5 பேரை வெட்டிய நபரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தப்பியோடிய ஹரியை கைது செய்வதாக ஊத்துக்கோட்டை போலீசார் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மதுபோதையில் இருந்த வாலிபர் 5 பேரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.